மரக்காணம் : மரக்காணம் அருகே அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடற்கரையோரம் மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவர்கள் மேற்கொண்டனர். இதில் திண்டிவனம் சப்- கலெக்டர் அனு முன்னிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, வட்டார கல்வி அலுவலர் சேகர். பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணபூரணி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு அளிக்க வேண்டும். வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்குரிமை ஜனநாயகத்தின் கடமை போன்ற வாசகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். …