Friday, September 20, 2024
Home » மாணவர்கள் எதிர்காலத்தை கருதி தமிழக அரசுக்கு சொந்தமான பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

மாணவர்கள் எதிர்காலத்தை கருதி தமிழக அரசுக்கு சொந்தமான பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

by kannappan

சென்னை: மாணவர்கள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலத்தை கருதி தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பட்டமளிப்பு விழா தாமதத்துக்கு ஆளுநர் மாளிகை இன்னும் அனுமதி அளிக்காததே காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 – 22 கல்வியாண்டில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு 6 மாதத்துக்கு மேலான நிலையில் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா முடிந்து சான்றிதழ்கள் டிசம்பருக்குள் வழங்கப்படுவது வழக்கம். பட்டமளிப்பு விழா நடைபெறாததால் ஜூனில் வழங்கப்பட்ட தற்காலிக சான்றிதழும் 6 மாதம் ஆனதால் காலாவதியாகிவிட்டது. மாணவர்களுக்கு நிலையான பட்டச்சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு கை நழுவும் ஆபத்து உள்ளது. எனவே மாணவர்கள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலத்தை கருதி தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தர வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்….

You may also like

Leave a Comment

20 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi