பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜா கூலி தொழிலாளி. இவரது மகன் நித்தீஷ்குமார்(14). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி அவரது வீடு அருகே உள்ள மாதா கோயிலுக்கு சென்றுள்ளார். மழையின் காரணமாக சீரியல் லைட் அமைக்கப்பட்டிருக்கும் மின் வயர்களில் மின் கசிவு ஏற்பட்டதால் அதனை தொட்ட நித்திஷ்குமார், மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல் திருவலம் சேவூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் டாஸ்மாக் பாரில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் கார்த்தி(14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்தி நேற்றுமுன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சேவூர்- காட்பாடி சாலையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள இரும்பு கிரில் கேட் மீது கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து கார்த்தி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்….