நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. தென் தமிழக கடல் பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் 2.5 முதல் 3.3 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், தேங்காப்பட்டணம் பகுதிகளில் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள், பாதுகாப்பான பகுதிகளில் படகுகளை நிறுத்தி வைத்து இருந்தனர். …