தாம்பரம்: மூளை பக்கவாதத்தால் பேசும் திறனை இழந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, பேச வைத்து ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னையை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், மூளை பக்கவாதம் காரணமாக பேசும் திறனை இழந்த நிலையில் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் குழு பரிசோதித்து, அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த பார்த்தபோது, அவரது மூளையின் ”மொழி பகுதியில்” பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டது.இதனால், மறுவாழ்வு நிபுணர்கள் குழு பக்கவாதத்தின் தன்மை மற்றும் அவரது உடல் நிலை, செயல்பாடு மற்றும் மூளையின் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து, பின்னர் சிகிச்சை அளித்தனர். இதன், காரணமாக அவர் பசி, தாகம், வலி மற்றும் அசவுகரியம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அவரே தெரிவித்துள்ளார். மேலும், பேச்சு திட்டமிடலில் தீவிர மறுவாழ்வு மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான தொழில்நுட்பத்துடன் வழக்கமான மறுவாழ்வு சிகிச்சை முறைகளும் இணைந்து அளிக்கப்பட்டதின் காரணமாக, அவரது செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வாரத்திற்கு 3 முறை பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3 வார பயிற்சிக்கு பின் அவர் சரளமாக பேச தொடங்கி முழுமையாக குணமடைந்துள்ளார்….