திருவள்ளூர்: வெள்ளவேடு அருகே சோதனை சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 450 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா பறிமுதல் செய்து இவற்றை கடத்திவந்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உசேன் (22), ஜெகன் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’ சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குட்காவை இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்திவந்தோம்’’ என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….
சோதனை சாவடியில் சோதனை: வெள்ள வேட்டில் 450 கிலோ குட்கா பறிமுதல்; 2பேர் கைது
previous post