சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.40,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், அதன் மீதான மோகம் மட்டும் பெண்களுக்கு சற்றும் குறையவில்லை. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர ஒரு சவரன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.5100ல் இருந்து ரூ.5060-ஆக குறைந்து உள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.40,360க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,045க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நேரத்தில், தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….