ஓவல்: மகளிர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்திலுள்ள மவுண்ட் மவுங்கானுய் பகுதியிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஷ்ட்ரேகர் 67 ரன்களும், ஸ்னே ரானா 53 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினர். இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 43 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் சிறப்பக பந்துவீசிய ராஜேஷ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச போட்டிகளில் இதுவரை இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 10 ஆட்டங்களிலும் இந்தியாவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது….
மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
previous post