பேளூர், ஏத்தாப்பூர் சாலை, சேலம் மாவட்டம். ஒற்றையடிப் பாதையிலிருந்து சற்றே விலகிப் பிரியும் மண்சாலையில் அடர்ந்து வளர்ந்த அரசமரமும் வேம்பும் பரந்து தண்ணிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன. மழையின் மிச்ச ஈரம் மரத்தின் இலைகளிலிருந்து காற்றசைக்கும் போதெல்லாம் நீர்த்திவலைகளை சிதறவிட்டுக் கொண்டிருக்கின்றன. பகலிலும் மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக வெளிச்சம் குறைவாகவே உள்ளது. சுற்றுப்புறமெங்கும் குளுமையும் பச்சை வாசனையும் நிறைந்திருக்கிறது.சுற்றிக் கட்டப்பட்ட அரையடி சுவர். முன்னர் பூசப்பட்ட சிமெண்ட் தரை, கருமை கூடி ஈரத்தின் பாசி படர்ந்து பழமை கூடியிருக்கிறது. அய்யனார் ஆயுதங்களுடன் உருட்டும் விழிகளுடன் வீற்றிருக்க கோயிலின் முன்பு நடப்பட்டிருக்கும் வேலாயுதங்கள் துருவேறியிருக்கின்றன. கட்டப்பட்டிருக்கும் வெண்கல மணிகள் காற்றில் அசைந்து அவ்வப்போது ஒலிகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.பெய்த மழையில் நனைந்து கண்கவர் வண்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஈரக் குதிரையின் கனைப்பொலி சூழலின் அமைதியினை சலனப்படுத்துகிறது!பொன்னம்பலம் சிதம்பரம் …
ஐயனார் புரவி
previous post