Tuesday, October 1, 2024
Home » ஆன்லைன் வகுப்புக்கு தனியறை நிர்வாண படங்களை எடுத்து வெளியிட்ட 15 வயது மாணவி: பெற்றோருக்கு மாரடைப்பு

ஆன்லைன் வகுப்புக்கு தனியறை நிர்வாண படங்களை எடுத்து வெளியிட்ட 15 வயது மாணவி: பெற்றோருக்கு மாரடைப்பு

by kannappan

அகமதாபாத்: கொரோனா பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இதற்காக, பெற்றோர்கள் கஷ்டப்பட்டு வாங்கித்தரும் செல்போன்களை, பல மாணவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். குஜராத்மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. தனது மகள் இடையூறின்றி படிப்பதற்காக பெற்றோர் தனி அறையையும் கொடுத்து, நவீன செல்போனையும் வாங்கி கொடுத்தனர். ஆனால், அந்த மாணவி படிப்பதற்கு பதிலாக, தனது முழு நிர்வாண படங்களை எடுத்து இணையதளங்களில் பதிவேற்றினார். அதோடு, தனது உறவுக்கார பெண்ணையும் நிர்வாண படங்களை பதவியேற்றும்படி வலியுறுத்தினார். அந்த பெண்ணின் பெற்றோர் மூலமாக இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும், மாணவியின் பெற்றோர் 2 பேருக்குமே அதிர்ச்சியில்  மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், சிகிச்சை பிறகு வீடு திரும்பினர். பின்னர், மகளை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றனர். அவர்கள், ‘நீ செய்திருக்கும் செயல், சைபர் சட்டப்படி குற்றம். உன்னை கைது செய்து சிறையில் அடைக்க முடியும்,’ என்று எடுத்து கூறினர். பின்னர், மாணவி தனது செயலுக்காக வருந்தி, திருந்தினார்….

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi