சென்னை: தி.நகர் வெங்கட்நாராயணா சாலை திருப்பதி தேவஸ்தானம் எதிரில் உள்ள ஜெ.ஓய்.எம். கல்யாண மண்டபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்று தொடங்கி, 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு, பர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், மிக குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி முழுக்க முழுக்க தேக்கு மரத்தினால் ஆன குஷைன் சோபா நல்ல தரத்துடன் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் சேர்கள் மலிவான விலையில், பல்வேறு வகையான டிசைன்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கொரோனா காலமாக இருப்பதால் அரசின் விதிகளை கடைப்பிடிக்கும் வகையில் பொருட்களை வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், என்று விற்பனை கண்காட்சியை நடத்துபவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்….
அதிரடி விலை குறைப்பில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை: தி.நகரில் இன்று தொடங்குகிறது
previous post