Sunday, October 6, 2024
Home » அதிக மீன்பாடு கிடைக்காததால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்: நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படகு உரிமையாளர்கள் தகவல்

அதிக மீன்பாடு கிடைக்காததால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்: நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படகு உரிமையாளர்கள் தகவல்

by kannappan

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ள நிலையில், இன்று காலை கரை திரும்பிய படகுகளில் மீன்வரத்து குறைந்தது. தமிழக கடலில் மீன்பிடி தடைகாலம் முடிவுற்ற நிலையில் கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்களுக்கு இறால் மீன்வரத்து கைகொடுத்தது. எதிர்பார்த்த அளவிற்கு மீன்பாடும் இருந்தது. ஆனால் மீனவர்களால் பிடித்து வரப்பட்ட இறால், நண்டு, கனவாய் மற்றும் பலவகை மீன்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு விலை கிடைக்கவில்லை. வியாபாரிகள் வழக்கமான கொள்முதல் விலையை விட குறைந்த விலை நிர்ணயம் செய்து மீன்களை வாங்கினர். இதனால் கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்களுக்கு மீன்விற்பனை செய்த தொகையில் டீசல் செலவு, படகில் செல்லும் மீனவர்கள் சம்பளம், பேட்டா உள்ளிட்டவை போக படகு உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உரிய விலை கிடைக்காததால் லாபத்திற்கு பதில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் டீசல் விலையும் உயர்ந்தது. பெரிய விசைப்படகுகள் கடலுக்கு சென்று திரும்ப 600 லிட்டர் வரை டீசல் தேவைப்படும் என்பதால் டீசல் செலவு, மீனவர்கள் கூலி போக லாபம் இல்லாத நிலையில் வாரத்தில் இரண்டு முறை மட்டும் கடலுக்கு செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்தனர். நஷ்டம் ஏற்படுவதால் பெரும்பாலான பெரிய படகின் உரிமையாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். இதனால் இவர்களது படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து பெரிதும், சிறியதுமாக 250க்கும் குறைவான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவு முழுவதும் மீன்பிடித்து இன்று காலை கரை திரும்பினர். கரை திரும்பிய படகுகளில் அதிகபட்சமாக 80 கிலோ வரை இறால் மீன்கள், 30 கிலோ கடல் நண்டு மற்றும் பலவகை மீன்கள் பிடிபட்டு இருந்தன. பெரிய படகுகளில் எதிர்பார்த்த அளவிற்கு மீன்பாடு இல்லை. இதனால் பெரிய படகின் உரிமையாளர்களுக்கு இன்றும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீனவர்களால் பிடித்து வரப்படும் இறால், நண்டு உளளிட்ட மீன்களுக்கு உரிய விலை இல்லாதது, டீசல் விலை உயர்வு மற்றும் மீன்வரத்து குறைவு போன்ற காரணத்தால் 250க்கும் குறைவான படகுகள் கடலுக்கு சென்று திரும்பிய நிலையில்,  ராமேஸ்வரம் துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டன. வாரத்தில் இரண்டு முறை கடலுக்கு செல்ல முடிவுவாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய மூன்று நாட்களில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று அடுத்தநாள் கரை திரும்புவது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக மீனவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், வாரத்தில் இரண்டு முறை மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளதால் நாளை முதல் நிலைமை சீராகும் வரை வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும்  விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்….

You may also like

Leave a Comment

7 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi