திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படை தளம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கடற்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் நேற்று இரவு உத்தரபிரதேச மாநிலம் அலிஜார் பகுதியை சேர்ந்த சுஷார் அத்ரி (19) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை பணி மாறுதலுக்காக 5 மணியளவில் மற்றொரு வீரர் வந்தார். அப்போது சுஷார்அத்ரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக உடலை மீட்டு எர்ணாகுளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சுஷார்அத்ரி பாதுகாப்புக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி வைத்திருந்தார். அந்த துப்பாக்கியால் தான் அவர் சுடப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது….