சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது என வைகோ கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவை அக்.28ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. தமிழக அரசு விளக்கம் தந்தும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை, ஆளுநர் வழக்கம்போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய்விட்டது என வைகோ கூறியுள்ளார்….