Monday, September 30, 2024
Home » திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் 220 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் 220 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை

by kannappan

திண்டுக்கல்:திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் டீக்கடை மற்றும் உணவுகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பைகள் பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு தகவல் வந்தது. இதன்படி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன் உத்தரவின் பேரில் நேற்று காலை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வம் தலைமையிலான ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பைகளை கொண்டு உணவு பொருட்கள், சாம்பார்,  சட்னி,  டீ ஆகியவைகள் பார்சல் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 10 கடைகளுக்கு தலா 2000 அபராதமும், பார்சல் மடிப்பதற்கான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் பைகள் என 220 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்….

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi