அருப்புக்கோட்டை: மின்கம்பத்தை மாற்றியமைக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியை சேர்ந்தவர் வீரம்மாள். இவரது நிலத்தில் மின்வாரியத்துக்கு சொந்தமான பழைய மின்கம்பம் இருந்தது. அதனை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க கோரி பாலையம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வீரம்மாள் மனு கொடுத்துள்ளார். இதற்கு உதவி மின்பொறியாளர் பசுவநாதன் (58) ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையில் வீரம்மாள் புகார் அளித்தார்.அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி, பாலையம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு வீரம்மாள் நேற்று காலை சென்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை பசுவநாதனிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் பசுவநாதனை கைது செய்தனர். …