சென்னை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மந்தைவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, மந்தைவெளி, பெஸ் நகரை சேர்ந்தவர் மரியதாஸ் (25). இவர் அங்குள்ள வீடுக்ளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் நண்பர்களுடன் அப்பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மரியதாசுக்கு நெல்லையில் உள்ள தன்னுடைய உறவினரின் பெண் ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தன்னுடன் அறையில் தங்கியிருந்த நண்பர்கள் வெளியில் சென்றிருந்தனர். மரியதாஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதையடுத்து வெளியில் சென்றிருந்த நண்பர்கள் காலையில் வீட்டிற்கு வந்த பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதிக நேரம் ஆகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ேள சென்று பார்த்த போது மரியதாஸ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக நடந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மரியதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என்று விசாரித்து வருகின்றனர்….