சென்னை: நீட் விலக்கை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,‘‘நீட் தேர்வு அச்சத்தில் தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு. வரும் 7ம் தேதி நீட் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இனியும் தற்கொலைகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும். ஏற்கனவே பல்லாயிரம் முறை நான் கூறியவாறு நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும். இதை புரிந்து கொண்டு நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். ஒன்றிய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது….