புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் 426 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீனா குமாரி தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாகரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு 426 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….