சென்னை: தொடர் விடுமுறைக்கு பிறகு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்புவதால் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோகுலாஷ்டமி விடுமுறை, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையில், சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் புறப்பட்டு சென்றனர்.இந்நிலையில், நேற்றுடன் விடுமுறை முடிந்து மீண்டும் எப்போதும்போல் பணிக்கு செல்ல வேண்டியிருப்பதால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தற்போது தென் மாவட்டங்களில் இருந்து இருசக்கர வாகனத்திலும் கார், அரசு பேருந்துகள், வேன்கள் மூலம் சென்னை திரும்புகின்றனர். இதனால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்னை மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. …