Monday, September 23, 2024
Home » மோசமான காலநிலையால் தேயிலை செடிகளில் கொப்பள நோய் தாக்குதல் அதிகரிப்பு

மோசமான காலநிலையால் தேயிலை செடிகளில் கொப்பள நோய் தாக்குதல் அதிகரிப்பு

by kannappan

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மேகமூட்டம் மற்றும் மழை காலநிலையால் தேயிலை செடிகளில் கொப்பள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. நீலகிரி  மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் உட்பட மாவட்டம்  முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம்  ேமற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. விவசாயிகள் உரமிட்டு பராமரிப்பு  பணிகள் மேற்கொண்டதால், மேலும் மழை காரணமாக பசுந்தேயிலை மகசூலும்  அதிகரித்தது. மழை பெய்து நன்கு வெயில் அடித்தால் மட்டுமே  தேயிலை மகசூல் அதிகரிக்கும். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பகல்  நேரங்களில் வெயிலின்றி மழை மற்றும் மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது.  பல்வேறு வகையான மாறுபட்ட காலநிலைகள் நிலவுவதால் பசுந்தேயிலை வளர்ச்சி  பாதிப்படைந்துள்ளது.மழைக்கு பின் போதுமான அளவு வெயில் இல்லாததால்  தேயிலை செடிகளில் வளர்ந்துள்ள தேயிலை கொழுந்து இலைகளில் கொப்பள நோய்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊட்டி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும்  கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் கொப்பள நோய் தாக்குதலால் பல ஏக்கர்  பரப்பளவிலான தேயிலை செடிகள் பாதிப்படைந்துள்ளன. கொப்பள நோய் தாக்குதலால்  பாதிக்கப்பட்ட பசுந்தேயிலை பறித்து தேயிலை தூள் உற்பத்திக்கு பயன்படுத்த  முடியாது என்பதால், தேயிலை மகசூல் அதிகரித்தும் நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், ேமகமூட்டமான காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் கொப்பள நோய் தொடர்ந்து பரவி  வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,“நீலகிரி மாவட்டத்தின்  பொருளாதாரம் தேயிலை விவசாயத்தை நம்பியே உள்ளது. மழை காரணமாக தேயிலை மகசூல்  அதிகரித்த நிலையில், போதிய வெயில் இல்லாததால் தேயிலை செடிகளில் கொப்பள  நோய் பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட  வாய்ப்புள்ளது’’ என்றனர்….

You may also like

Leave a Comment

12 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi