திருவெறும்பூர்: திருச்சி நவல்பட்டு போலீசார் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதனை விரட்டி சென்ற போலீசார் எம்ஐஈடி பஸ்ஸ்டாப் அருகே காரை மடக்கி பிடித்தனர்.அந்த காரில் 7 பேர் இருந்தனர். மேலும் காரை சோதனையிட்டபோது காரில் 2 வீச்சரிவாள், 2 வாள், ஒரு சூரி கத்தி, 2 நாட்டு வெடிகுண்டு இருந்தது தொியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து நவல்பட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர்கள், குரு மணிகண்டன்(29), ரவி(21), வைரவேல்(36), தளவாய் ராஜேஷ்(45), குணசேகரன்(28), தீனதயாளன்(29), ராஜா(39) என்பது தொியவந்தது. மேலும் தங்களின் பாதுகாப்புக்காக இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக 7 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் கூலிப்படையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் 7 பேரையும் திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்….