சென்னை: காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை நுண்ணறிவுப் பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 47 பைக்குகள், 17 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 64 வாகனங்கள் மற்றும் பழைய வாகன உதிரி பாகங்கள் வரும் 29ம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 29ம் தேதி காலை 10 மணி முதல் 11.15 மணிக்குள் முன் பணமாக ரூ.1000 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். முன்பண தொகை செலுத்தும் நபர் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை நகல் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்) ஜிஎஸ்டி சான்று நகல் மற்றும் அங்கீகார கடிதம் (நிறுவனத்திற்காக கலந்து கொள்பவர்கள்) ஆகியவற்றை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்….