தாராபுரம்: தாராபுரத்தில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (50). அரசு பஸ் டிரைவர். இவரது வீட்டின் அருகே உள்ள 12 வயது சிறுவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஆரோக்கியதாஸ் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுவன் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தான். அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆரோக்கியதாஸை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்….