சென்னை: சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக பைக் டாக்ஸிகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஓலா, உபெர், ரேப்பிடோ போன்ற நிறுவனங்களின் பெயரில் பைக் டாக்ஸிகள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சென்னையில் பைக் டாக்சிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதற்கு நிறுவனங்களின் சார்பிலும் பல்வேறு ஆஃபர்களை வழங்குவதால் மக்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மயிலாப்பூர்- சென்ட்ரல் வரை ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஆட்டோவில் ரூ.200 வசூலிக்கப்படுகிறது, ஆனால் பைக் டாக்ஸிகளில் 50 முதல் 60 ரூபாய் வசூலிப்பதால் மக்கள் பைக் டாக்ஸிகளை உபயோகிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இதுவரை பைக் டாக்ஸிகளுக்கு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….