சென்னை: நடிகர் சக்ரவர்த்தி மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். 1980களில் பிரபல நடிகராக இருந்தவர் சக்ரவர்த்தி. சிவாஜி, ரஜினி, கமல் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிவாஜி நடிப்பில் வெளியான ரிஷிமூலம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதுவரை 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை ராதிகாவுடன் ‘கண் மலர்களின் அழைப்பிதழ்’ என்ற பாடலில் நடித்திருந்தார். இந்த பாடல் அப்போது பிரபலம். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் சென்னையில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தார். அங்கு பிரபல விளையாட்டு தொலைக்காட்சியில் பின்னணி குரல் கொடுத்தார். இதுதவிர தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் 62 வயதாகும் சக்ரவர்த்தி, நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நடிகர் சக்ரவர்த்தியின் திடீர் மரணம் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய்குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்….