Monday, October 7, 2024
Home » இலங்கைக்கு சரியான நேரத்தில் உதவி இந்தியாவுக்கு ஐஎம்எப் பாராட்டு

இலங்கைக்கு சரியான நேரத்தில் உதவி இந்தியாவுக்கு ஐஎம்எப் பாராட்டு

by kannappan

வாஷிங்டன்: கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு தக்கநேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) பாராட்டு தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. அங்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால், 40,000 டன்கள் டீசலை உடனடியாக வழங்கியது. மேலும், ரூ.7,500 கோடி கடன் வழங்க இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்தியா எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரூ.3,750 கோடி கடன் வரம்பில் வழங்கி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா செய்து வரும் உதவிக்கு இலங்கையின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு தக்க நேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நிதியமும் பாராட்டு தெரிவித்துள்ளது.ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாளில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.‘‘இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்சார வெட்டு பெருமளவிலான மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதன் விளைவாக இலங்கை அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களும் நடந்து வருகின்றன. அந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும், பெட்ரோல், டீசல் போன்றவற்றையும் வழங்கும் இந்தியாவின் நடவடிக்கை முன்மாதிரியானது’’ எனக் கூறினார். இதைத் தொடர்ந்து கிறிஸ்டாலினாவுடன் சர்வதேச பொருளாதார வளர்ச்சி சூழ்நிலை குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.உதவிகள் தொடரும்சர்வதேச நிதிய கூட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேசினார். அப்போது, அண்டை நாடு என்ற வகையிலும், நெருங்கிய நட்பு நாடு என்கிற வகையிலும் இயன்ற அனைத்து ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்க இந்தியா முயற்சிக்கும் என நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். கிரிப்டோகரன்சியால் மிகப்பெரிய ஆபத்து உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியத்தின் கருத்தரங்கில் அவர் பேசுகையில், ‘‘எல்லா நாடுகளுக்கும் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்துதான். ஏனெனில், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அத்தகைய நாணயம் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது. இந்த முறைகேடுகளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவதே ஒரே பதில் என்று நினைக்கிறேன். கிரிப்டோ பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு அரசு 30 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் கிரிப்டோவை யார் வாங்குகிறார்கள், யார் விற்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்,” என்றார். …

You may also like

Leave a Comment

19 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi