Friday, October 4, 2024
Home » விருதுநகரில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து தொடர் பலாத்காரம்: 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

விருதுநகரில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து தொடர் பலாத்காரம்: 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

by kannappan

விருதுநகர்: விருதுநகர், மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (27). திருமணம் ஆனவர். இவர் தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்த 22 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதை வீடியோ எடுத்து தனது நண்பர் மாடசாமியிடம் (37) காட்டினார். வீடியோவை தனது செல்போனில் பதிவேற்றம் செய்த மாடசாமி, பெற்றோரிடம் காட்டி விடுவதாக மிரட்டி அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். மேலும் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பினார்.இதை பார்த்த அவரது நண்பர்கள் பிரவீன் (22), ஜூனத் அகமது (24) மற்றும் 4 பள்ளி மாணவர்கள் வீடியோவை, வலைத்தளங்களில் பதிவிடுவோம் என மிரட்டி இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி தொடர் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் விரக்தியடைந்த இளம்பெண், 181 இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து விருதுநகர் ரூரல் போலீசார் விசாரணை செய்தனர். இதில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 மாணவர்கள் இளம்பெண்ணை தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்….

You may also like

Leave a Comment

ten − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi