சென்னை: உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகி, அதன் காரணமாக உருவான வெள்ளம் குறித்து அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து மீள வேண்டும் என விழைகிறேன் எனவும் கூறியுள்ளார். …