குடியாத்தம் : தமிழ்நாடு போக்குவரத்து துறை துணை ஆணையர் இளங்கோவன் உத்தரவின்படி, வேலூர் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் மேற்பார்வையில் குடியாத்தம் மோட்டார் வாகன முதல்நிலை ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் அலுவலர்கள் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், டிரைவிங் லைசன்ஸ் வைத்துள்ளார்களா, ஓவர்லோடு ஏற்றிவரப்படுகிறதா, சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வருகிறார்களா எனஆய்வு செய்தனர். அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தி வந்த 4 லாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து, 4 லாரி டிரைவர்களிடம் தலா ₹10 ஆயிரம் வீதம் ₹40ஆயிரம் அபராதம் வசூலித்தனர். அதேபோல் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அழித்தனர்….