ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த பிப்.7ம் தேதி பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை செய்த நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….