மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பெரும்பேர் கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமை தாங்கினார். அச்சிறுப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, பொன்மலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் வசந்தா கோகுலக்கண்ணன், மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்ட சத்து குறித்த கண்காட்சி, டெங்கு நோய் விழிப்புணர்வு குறித்த கண்காட்சியை மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அனைவரும் பார்வையிட்டனர். முகாமில் அச்சிறுப்பாக்கம், பெரும்பேர்கண்டிகை, கடமலைபுத்தூர், சீதாபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதனை செய்து கொண்டு மருந்து, மாத்திரை பெற்று சென்றனர். நிகழ்ச்சியை பெரும்பேர் கண்டிகை ஊராட்சி நிர்வாகம் செய் ஏற்பாடுதது. முடிவில் லட்சுமணன் நன்றி கூறினார். …
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்
previous post