சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் மைந்தர்கள். நாங்கள் சகோதர, சகோதரிகளாக உள்ளோம். கேரளம், தமிழகம் இடையே பன்னெடுங்கால உறவு தொடருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியது திராவிட இயக்கம். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியது திராவிட இயக்கம். திமுகவை பொறுத்தவரை திராவிட கொள்கைளை முன்னெடுத்து வருகிறது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் போராட்டம் தொடர வேண்டும். மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது மட்டும் அல்ல. இந்த புத்தகம், தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாறு குறித்த தொகுப்பாகும். கடந்த 1960, 70களில் இந்திய அரசியலிலும், சமுதாயத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்து காட்டும் இந்த புத்தகம் சிறு துளி தான். இன்னும் பல பாகங்கள் வெளி வர வேண்டும். அப்போது தான் இந்த வரலாறு எல்லோருக்கும் தெரியும். நாட்டை பிரித்தாளும் சக்திகளுக்கு எதிரானவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்து வருகிறார். பன்முகத்தன்மை, கூட்டாட்சியை பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம். நம்மை பிரித்து ஒடுக்குகிற சக்திகளுக்கு எதிராக நாம் இணைந்து போராடுவோம்….