திருவள்ளுர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று 27ம் தேதி 1450 மையங்களில் நடக்கிறது. அதில் 2.55 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்க தீவிர போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஏற்கனவே போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளித்திருந்தாலும் இன்று நடைபெறும் முகாமில் சொட்டு மருந்து இலவசமாக அளிக்கப்படும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமிற்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள், முகக்கவசம் அணிந்து வருவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் அவசியமாகும். முகாம் நடைபெறும் இன்று சொட்டு மருந்து செலுத்தி கொள்ளாத குழந்தைகளை கண்டறிந்து நாளை 28ம் தேதி வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். …