விழுப்புரம்: விழுப்புரம் அதிமுக முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்ட 300 பேர், அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். விழுப்புரம் நகர அதிமுக முன்னாள் துணை சேர்மன் முத்துலட்சுமி, மேலவை பிரிதிநிதி தட்சிணாமூர்த்தி, நகர மாணவரணி துணை அமைப்பாளர் கோபிநாத், வார்டு இணை செயலாளர் ஷூலா உள்ளிட்ட 300 பேர் அதிமுகவிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் பொன்முடி திமுக சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர் பேசுகையில், திமுகவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் இரவு, விழுப்புரத்தில் அதிமுக பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு, அக்கட்சியினரே எதிர்ப்பு குரலை வெளிப்படையாக தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அக்கட்சியிலிருந்து மாஜி துணை சேர்மன் உள்ளிட்ட 300 பேர் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். கட்சியில் இணைந்தவர்கள் கூறுகையில், அதிமுகவில் தலைமைக்கு தட்டுப்பாடு, கொள்கை கோட்பாடுகள் அவலநிலைக்குள்ளாகியுள்ளதால், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்படும் திமுகவில் இணைந்து பணியாற்ற உள்ளோம். அதிமுக மாவட்ட செயலாளரின் செயல்பாடுகளும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்….
தலைமையும் சரியில்லை.. கொள்கையும் இல்லை.. திமுகவில் ஐக்கியமான அதிமுகவினர் விளக்கம்
previous post