திண்டுக்கல்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. திண்டுக்கல் மாநகராட்சி 4வது வார்டில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பாரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவர், நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பின், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் மநீம திண்டுக்கல் நகரச் செயலாளர் விஜயக்குமார் உள்பட பலர் இணைந்தனர்….