சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். பேரவையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நீட் விலக்கு மசோதா நிறைவேறிய பின் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். …