Sunday, October 6, 2024
Home » அரசு விரைவு பேருந்துகள் நிற்க வேண்டிய உணவகங்கள் எவை?: போக்குவரத்து நிர்வாகம் அறிவிப்பு

அரசு விரைவு பேருந்துகள் நிற்க வேண்டிய உணவகங்கள் எவை?: போக்குவரத்து நிர்வாகம் அறிவிப்பு

by kannappan

சென்னை:அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நீண்ட தூர பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது.  இதில் தினசரி ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்துகள் தொடர்ந்து நீண்ட நேரம் இயக்கப்படுவதால், பயணிகளின் நலன் கருதி சாலையோர உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். திருச்சி, சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த வழித்தடங்களில் கூடுதல் விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்த போக்குவரத்துத் துறை தடை விதித்தது. இதையடுத்து  சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் விரைவுப்  பேருந்துகள் நிற்க வேண்டிய புதிய உணவகங்கள் குறித்த விவரத்தை, அரசு விரைவுப்  போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளதுஇதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதியாக 18 உணவகங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உணவகங்களில் பயணிகள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக தற்போது நிறுத்த பணிமனை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவற்றில் எந்தவித புகாருமின்றி பேருந்துகளை நிறுத்தி செல்ல அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனை கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், துணை மேலாளர்கள் (இயக்கம்) மற்றும் அனைத்து உதவி மேலாளர்கள் ஆகியோர் எந்தவித குறைபாடுமின்றி செயல்படுத்த வேண்டும்.இந்த ஒதுக்கீட்டின் விவரத்தை துணை மேலாளர் (இயக்கம்) மற்றும் உதவி மேலாளர் (இயக்கம்) கோயம்பேடுக்கு தினசரி அந்தந்த உணவகத்திற்கும் மற்றும் உதவி மேலாளர் (இயக்கம்), விழுப்புரம் ஆகியோருக்கும் தெரிவிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் இருந்து சென்னை நோக்கி இயக்கப்படும் பேருந்துகள் தற்போது உளுந்தூர்பேட்டை-விழுப்புரம் இடையே அமைந்துள்ள தனியார் உணவகத்தில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினசரி இருபுறமும் பேருந்து இயக்கிய விவரம், உணவகத்தில் நின்ற விவரம் பணிமனை வாரியாக கைபேசி செயலி மூலம் அனைத்து கிளை மேலாளர்களும் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும். விழுப்புரம் உதவி மேலாளர், பணிமனை வாரியாக சம்பந்தப்பட்ட உணவகத்தில் நின்ற பேருந்துகளின் விவரத்தை தினசரி தெரிவிக்க வேண்டும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் சம்பந்தப்பட்ட உணவகங்களில் பேருந்தை நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

one + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi