சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவும் பாஜகவும் நாடகமாடுவதாக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அதிமுக – பாஜக நாடகத்திற்கு நகர்ப்புற தேர்தலில் மக்கள், மாணவ சமுதாயம் தக்க பதிலடி தரும் என்று கூறினார். நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற ஓ.பி.எஸ். துடிக்கிறார் என்றும் அறவழி போராட்டம் நடத்தி தமிழ்மொழியை காப்பாற்றிய மண் என்பதை ஓ.பி.எஸ்.க்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். …