Tuesday, October 1, 2024
Home » கோவையிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் துப்பாக்கி எடுத்துச்செல்ல முயன்ற கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது: ஸ்கேனர் காட்டி கொடுத்ததால் சிக்கினார்

கோவையிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் துப்பாக்கி எடுத்துச்செல்ல முயன்ற கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது: ஸ்கேனர் காட்டி கொடுத்ததால் சிக்கினார்

by kannappan

பீளமேடு: கோவையிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கேரள காங்கிரஸ் பிரமுகர் துப்பாக்கி எடுத்துச்செல்ல  முயன்றதை ஸ்கேனர் காட்டிக்கொடுத்தது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை  நடத்தி வருகிறார்கள். கோவையிலிருந்து நேற்று காலை 6.55 மணிக்கு தனியார் விமானம் ஒன்று பெங்களூர் புறப்பட தயாராக  இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழிற்பாதுகாப்பு  படை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணியின் சூட்கேசை ஸ்கேனரில்  சோதனை செய்தபோது அதில் ஒரு கைத்துப்பாக்கி (பிஸ்டல்) மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றிய போலீசார் அந்த பயணி  மற்றும் அவருடன் வந்த மற்றொருவரிடமும் விசாரித்தனர்.அதன் பின்னர் அவர்கள் இருவரும் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணை குறித்து  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விமானத்தில் செல்வதற்காக சூட்கேசில் துப்பாக்கி கொண்டு வந்தவரின் பெயர் தங்கல் (60). கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி என்ற இடத்தை சேர்ந்தவர். அவர் அந்த பகுதி வட்டார காங்கிரஸ் துணை  தலைவர். அவருடன் வந்தவரின் பெயர் அப்துல்கபூர் (60). அவரும் அதே பகுதியை சேர்ந்தவர்.  இருவரும் ஒன்றாக பெங்களூர் செல்வதற்காக டிக்கெட் எடுத்திருந்தனர்.தங்கல் கொண்டு வந்த சூட்கேசில் இருந்த துப்பாக்கி துருப்பிடித்ததாகும். அது அவருடைய தந்தை  பயன்படுத்தியது என்று தெரிவித்துள்ளார். தங்கல் பஞ்சாப் செல்வதால் அவருக்கு தேவையான துணிகளை சூட்கேசில் அவருடைய மகள் எடுத்து வைத்துள்ளார். அப்போது ஒரு துணியில்  சுற்றப்பட்ட துருப்பிடித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தெரியாமல் மகள் வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆய்வில் அந்த துப்பாக்கி துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. எனினும் லைசென்சு இல்லாத துப்பாக்கியை எடுத்து வந்ததற்காக தங்கலை  கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi