சென்னை: வள்ளலார் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: நமது அரசு ஆட்சி பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, ‘‘தனிப்பெருங்கருணை நாள்” என கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் அக்டோபர் 5.
‘உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’, ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!’ என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம், உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியை போற்றுவோம், வாழ்க வள்ளலார்.! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.