காரைக்கால்,அக்.5: மாநில அளவிலான நடந்த யோகா போட்டியில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை அமைச்சர் திருமுருகன் பாராட்டினர். புதுச்சேரி மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி- 2024 புதுச்சேரி உப்பளத்தில் உள்ள மைதானத்தில் கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் காரைக்கால் முகுந்தன் யோகாசன அகாடமி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14 to 18 வயது பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற மாணவர் சஞ்சய் புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.