மும்பை: பாலிவுட் மூத்த நடிகர் கோவிந்தா (60), பல்வேறு மொழிகளில் 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 1ம் தேதி காலை கொல்கத்தாவில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கு முன்பு மும்பையிலுள்ள தனது வீட்டில் துப்பாக்கியை சுத்தம் செய்தார்.
அப்போது எதிர்பாராவிதமாக அவரது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு சீறிப்பாய்ந்தது. இதில் அவரது காலில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அதே பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். கோவிந்தாவின் காலில் பாய்ந்திருந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.