தர்மபுரி, அக்.4: தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக சார்பில் இன்று (4ம் தேதி) காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, அரைநாள் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தர்மபுரியில் லாரிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில துணை தலைவரும், தர்மபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவருமான நாட்டான் மாது கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், இன்று அரைநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஆனால், லாரி, சரக்கு வாகனங்கள், வேன்கள் என மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரம் வாகனங்களும் வழக்கம் போல் இயங்கும்,’ என்றார்.