சென்னை: பள்ளிக்கல்வி, தொழில் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து தந்தவர் காமராஜர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். காமராஜர் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: இந்திய விடுதலைக்காக போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதலமைச்சராக தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து தந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களது நினைவுநாள். காந்திய பாதையில் இருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.