Tuesday, October 1, 2024
Home » அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் போதைத் தடுப்புக் குழு அமைக்க உத்தரவு

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் போதைத் தடுப்புக் குழு அமைக்க உத்தரவு

by Nithya

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் போதைப் பொருள் தடுப்புக் குழு அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துமாறு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்க்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தபட்சம் 5 மாணவர்களைக் கொண்ட போதைப் பொருள் தடுப்புக் குழு (Anti Drug Club) அமைக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, போதைப்பொருட்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை செயல்படுத்தும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்புத் பயிலகங்களில் போதைப்பொருள் தடுப்புக் குழு அமைக்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் 5 மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர், என்எஸ்எஸ் அல்லது என்சிசி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இடம்பெற வேண்டும். போதைப் பொருள் தடுப்புதொடர்பாக இந்த குழு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

10 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi