Tuesday, October 1, 2024
Home » தமிழகத்தில் அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு: கிராமப்புறங்களில் 33 நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனங்கள் மூலம் தீவிரமாக பரிசோதனை

தமிழகத்தில் அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு: கிராமப்புறங்களில் 33 நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனங்கள் மூலம் தீவிரமாக பரிசோதனை

by Mahaprabhu

சென்னை: தமிழகத்தில் காசநோய் பாதிப்பை தடுக்க கிராமப்புறத்தில் 33 நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனங்கள் மூலம் தீவிரமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசநோய் பாக்டீரியாவால் ஏற்படுகிறது (மைக்கோபாக்டீரியம் காசநோய்) குறிப்பாக, இந்த தொற்று நுரையீரலை பாதிக்கிறது. நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், துப்பும்போது காசநோய் காற்றில் பரவுகிறது. அந்த காச நோய் காற்றில் இருக்கும் போது அதை சுவாசிக்கும் நபருக்கு இந்த தொற்று பரவுகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டால் 100க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வில் தெரிவந்துள்ளது.

இத்தகைய கொடூரமான நோயை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறிவதற்குரிய பரிசோதனைகள், சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து மருந்துகள், முதுலுதவிகள் உள்ளடக்கியவை கிடைக்கிற வகையில் ‘வாக் இன் சென்டர் – ஒன் ஸ்டாப் டிபி சொல்யூஷன்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் நடமாடும் வாகனம் மூலமாகவும் பல்வேறு கிராமப்புறத்தில் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 33 நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்த பரிசோதனை வாகனம் மூலம் 977 பேர் காசநோய் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுகாதாரத்துறை தரப்பில் காசநோய் (TB) பரிசோதனை, குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்வது மூலமாக அந்த நோய் பரவலை தடுக்க அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி, காசநோய் இல்லாத தமிழ்நாடு 2025 திட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இலவச காசநோய் பரிசோதனை மேற்கொள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 33 நடமாடும் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளது.

இந்த நடமாடும் வாகனங்களில் எக்ஸ்ரே இயந்திரத்துடன் ஸ்பூட்டம் சோதனைகள் மேற்கொள்கின்றனர். மேலும் இந்த வாகனம் மூலம் குறைந்த மின்சாரம் உள்ள பகுதிகளில் கூட, அறிகுறி இல்லாமால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிய உதவுகிறது. அதுமட்டுமின்றி, மாவட்ட காசநோய் அதிகாரிகள், செங்கல் சூளைகள், பருத்தி ஆலைகள் மற்றும் கட்டுமான தளங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்த பரிசோதனை வாகனம் மூலம் 977 பேர் காசநோய் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

3 + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi