Monday, September 30, 2024
Home » இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி 3-2 என தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி 3-2 என தொடரை கைப்பற்றியது

by Francis

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 5வது ஒரு நாள் போட்டி நேற்று, பிரிஸ்டலில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.2 ஓவரில் 309 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்த இங்கிலாந்து, அடுத்த 107 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 107, ஹாரி புரூக் 72, பில் சால்ட் 45 ரன் அடித்தனர். ஆஸி. பவுலிங்கில் டிராவிஸ் ஹெட் 4, மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 31, மத்தேயு ஷார்ட் 58 ரன்னில் (30 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆக, 20.4ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 49 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் 2 போட்டியில் வென்றிருந்த ஆஸி. 3-2 என தொடரை கைப்பற்றியது. டிராவிஸ்ஹெட், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

 

You may also like

Leave a Comment

17 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi