கடலூர்: கடலூர் மத்திய சிறைக்கு அருகில் உள்ள பணியாளர்களுக்கான குடியிருப்பில் முதல்நிலை காவலர் செல்வகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பகல் 12 மணி முதல் மாலை 3.30 மணி வரை டிஐஜி ஆய்வு செய்துவிட்டு சென்ற நிலையில், மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த செல்வகுமார்(35) என்பவர், சிறைச்சாலைக்கு அருகில் உள்ள பணியாளர்களுக்கான குடியிருப்பில் அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….