Friday, September 27, 2024
Home » காவலில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 301 காவல் வாகனங்கள் ஏல விற்பனை

காவலில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 301 காவல் வாகனங்கள் ஏல விற்பனை

by Suresh

சென்னை: சென்னை பெருநகர காவலில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 109 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 192 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 301 வாகனங்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 03.10.2024 காலை 10.00 மணியளவில் நடைபெறும் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஏலத்திற்கான முன்பதிவு 30.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் அடையாள அட்டை மற்றும் GST பதிவெண் சான்றுடன் வந்து முன்பதிவு கட்டணம் ரூபாய் 1,000/- (ஆயிரம் ரூபாய்) செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் ஆகியோர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகையில் அன்றைய தினம் 25% தொகையும், மீதமுள்ள ஏலத்தொகையான 75% தொகை மற்றும் GST கட்டணம் மறுநாள் செலுத்திய பின் விற்பனை ஆணை வழங்கப்படும்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi